• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க லட்சுமி ராஜா கோரிக்கை..,

ByPrabhu Sekar

Mar 10, 2026

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லட்சுமி ராஜா அவர்கள், அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அரசு மூலம் வழங்கப்பட வேண்டும் எனத் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பேசிய அவர், பெண்களின் உடல்நலன் மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும், குறிப்பாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க தேவையான பொருட்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்காக, அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்க வேண்டும் என்றும், பொதுமக்கள் எளிதில் பெறக்கூடிய வகையில் அரசு ரேஷன் கடைகளில் அவை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரி, கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.

இந்த வழக்கு தற்போது விசாரணை நிறைவடைந்து தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளதாகவும், வரும் 2026 ஏப்ரல் 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த தீர்ப்பு பெண்களின் சுகாதார உரிமையை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

மேலும், சமூகத்தில் பல பெண்களுக்கு இன்னும் சானிட்டரி நாப்கின்கள் எளிதில் கிடைக்காத நிலை உள்ளது என்றும், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கின் மூலம் பெண்களின் சுகாதார உரிமை குறித்து அரசு முக்கியமான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் எனவும், பெண்கள் நலனுக்கான புதிய மாற்றங்கள் ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.