• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருவரங்குளம் புஷ்கரம் விவசாயக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ByS. SRIDHAR

Feb 28, 2026

புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லியில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணை தலைமை இயக்குனர் RC அகர்வால் மற்றும் காரைக்குடி அழகப்பா கல்லூரி முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா சிறப்புரையாற்றினார்.

புதுக்கோட்டை அருகே புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று வண்ணமயமாக நடத்தப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுடில்லியில் அமைந்திருக்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் இயக்குனர் ஆர் சி அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி மாணவர்களுக்கு பட்டமளிப்பு பேருரையாற்றினார்.

மாணவர்களின் சிறந்த சாதனைகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தும் காலநிலை இயற்கை வள மேலாண்மை அதிகமாக விளைச்சல் தரும் ரகங்கள் மற்றும் தாவர பன்முகத்தன்மை போன்ற முக்கிய சுற்றுச்சூழல் காலை நிலை குறித்தும் உரையாற்றினார். அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்தப்பட்ட வேளாண் தொழில்நுட்பம் பசுமைப் புரட்சி உள்ளிட்ட எதிர்கால சிந்தனைகளையும் மாணவர்களிடம் உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரி முன்னாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா பங்கேற்று மாணவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் ரத்தினம் நிர்வாக இயக்குனர் முனைவர் துரை நிர்வாக இணை இயக்குனர் வெங்கடேஷ் கல்லூரி நிதி ஆலோசகர் முனைவர் சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் 112 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.