தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில்

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திரபாண்டி மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






