மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி பெட்டி திருவிழாவை முன்னிட்டு, தவெக மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் மற்றும் நிர்வாகளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார் தவெக மாநில இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார்.,

இன்று தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக முக்கிய துறைகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமாக டெண்டர்களை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே 15 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது., இதற்கு எங்கிருந்து நிதி தயார் செய்தார்கள். எப்படி அனுமதி கிடைத்தது என தெரியவில்லை, எல்லாமே அவசர கதியில் இருப்பதை தூர்வாரி போக வேண்டும் என திமுக அரசு செயல்படுகிறது.
இன்று இடைக்கால பட்ஜெட் இது வரை தமிழகத்திற்கு எந்த நலனும் செய்யவில்லை என்பதை காட்டுகிறது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மாதிரி இல்லை, திமுகவின் குடும்ப பட்ஜெட் மாதிரி இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் 31 லட்சம் வேலைவாய்ப்புகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கி இருக்கிறோம் என சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தானாக 5 முதல் 6 லட்சம் பேர் சராசரியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் சிறுசிறு நிறுவனங்கள் உள்ளன., இந்த அரசு மூலமாக இல்லை பொத்தம் பொதுவாக 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி உள்ளோம் என்பது போய்யான கணக்கு.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கு 41 சதவீதம் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும், அதற்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தினால் 100 நாள் வேலையை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளது.
விவசாயிகளுக்கு போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத நிலை, தேவையான பாதுகாப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. நெல் கொள்முதல் நிலையத்தில் எந்த பாதுகாப்பு வசதியும் இல்லை.
விவசாயிகள் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் எல்லாத் துறையிலும் குறைந்தது 5% ஆவது வளர வேண்டும். ஆனால் தமிழகத்தில் மட்டும் 3% கூட விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. அதற்கு இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
பள்ளி கல்வித்துறைக்கு 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, சம்பளத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது., பள்ளிகளுக்கான கட்டிங்களோ, அதை கட்டுவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.
8200 கோடி ரூபாய் ஐந்து ஆண்டுகளில் கோவில்களுக்கு செலவு செய்துள்ளார்கள், அதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏனென்றால் கோவில்களுக்கு செலவு செய்ததை எந்த கணக்கிலும் யாரும் கேட்க முடியாதவாறு ஒவ்வொரு இடத்திலும் சேகர்பாபு முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஆக 8200 கோடி கோவில் பராமரிப்புக்கு, திருப்பணிக்கு செலவு செய்துள்ளோம் என்றால் மிக பெரிய முறைகேடு நடத்துள்ளது மாதிரி தெரிகிறது.
நெடுஞ்சாலைத்துறையை பொறுத்தமட்டில் ஏற்கனவே டெண்டர் விட்டுவிட்டனர்., போன மாதமே 2000 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாக எந்த நல்லதும் செய்யவில்லை.

இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்த ஒன்று என்னவென்றால் கேஸ் மாணியம் 100 ரூபாய் தருகிறேன் என சொல்லியிருந்தார்கள் அதை கொடுக்கவில்லை. மோட்டார் பம்புசெட் க்கு 10 ஆயிரம் மாணியம் தருவதாக கூறியிருந்தார்கள் கொடுக்கவில்லை.
மின்சார வாரியத்தில் மாதம் தோறும் மின்சார கட்டணம் என சொன்னார்கள் அதை அறிவிக்கவில்லை, பொதுமக்கள் கடைசியாக வாங்கிய தொகை 5 ஆயிரமாக தான் இருக்கும். 5 ஆயிரத்திற்கு அப்புறம் எந்த நிதியும் தரப்போவது இல்லை, ஏற்கனவே மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என சொன்னார்கள், 30 மாதம் கழித்து தான் அந்த பணத்தை கொடுத்தார்கள்., இப்போதும் கடைசியாக கொடுத்த 5 ஆயிரத்தோடு முடித்து கட்டிவிடுவார்கள். திரும்பவும் வந்தால் ஒரு ரூபாய் கூட கொடுக்க போவதில்லை, கடைசியாக இதே போன்று 4 ஆயிரமோ, 5 ஆயிரமோ கொடுத்து முடித்துவிடுவார்கள்., இனிமேல் திமுக அரசு 100 ரூபாய் கூட வரவு வைக்க மாட்டார்கள், அதற்கான எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
மொத்தமாக தமிழக மக்களின் வளங்களை சுருட்டும் பட்ஜெட்-ஆக இது திமுக அரசின் குடும்ப பட்ஜெட்-ஆக இருக்கிறது. 5 பைசா ஏழை எளிய மக்களுக்கு, சிறுகுறு தொழில்களுக்கு எந்த வகையிலும் பிரயோசனமே இல்லை.
இந்த ஆண்டு 22 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பை காட்டியுள்ளனர். 10 லட்சம் கோடியை தாண்டியது கடன், இவர்கள் வருவாயை பெறுக்குவதற்கு எதுமே செய்ததில்லை. சிறப்புத்திட்ட அமலாக்கத்துறைக்கு தான் உதயநிதியை நியமித்தார்கள், உதயதிநியாவது ஏதாவது செய்வார் என்றால் அதுவும் செய்யவில்லை.
வருவாய்-யை பெறுக்குவதற்கு புதிய திட்டங்கள் ஏதும் கொண்டுவரவில்லை, காமராஜ், எம்.ஜி.ஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதையும் இவர்கள் நஷ்டத்தில் இயங்க வைத்துவிட்டார்கள்., எந்த விதத்திலும் வருவாய்-யை பெறுக்க தமிழ்நாடு அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. அவர்கள் குடும்பம் செய்யும் தொழில்கள் மட்டுமே வளர்ந்து வருகிறது. தமிழக அரசு நொடிந்து போய் நோயாளியாக படுக்க அறையில் கொண்டு போய் வைக்க வேண்டிய அளவில் தான் தமிழ்நாடு அரசு இன்ஜின் இருக்கிறது., மொத்தமாக தமிழக மக்களுக்கு விரோதம் அளிக்கும் பட்ஜெட் ஆக வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு இந்த பட்ஜெட் பற்றி எதுமே தெரியாது, அவர்களுக்கு தேவையான எவ்வளவு கமிசன் வாங்க வேண்டுமோ அதை அவர் குடும்பத்தினர் பார்த்துக் கொள்கிறார்கள். அவருக்கு பட்ஜெட்டில் என்ன வாசிக்கப்படுகிறது, என்ன தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் என எதுமே அவருக்கு தெரியாது., மொத்தமாக தமிழக மக்களுக்கு விரோதமான பட்ஜெட்., என பேட்டியளித்தார்.






