• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

ByK Kaliraj

Nov 18, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜபுரம் காலனியில் அருள்மிகு: ஸ்ரீஜக்கம்மாள் திருக்கோவில்.. உள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் வழங்கினார்கள் .

அழைப்பிதழை பெற்றுக் கொண்டு அவசியம் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தார். தொடர்ந்து அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவிற்கு
ரூ30ஆயிரம் நிதியுதவி வழங்கினார் .