• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொன்.இராதாகிருஷ்ணன் சுய நினைவின்றி பேசுகிறார்..,

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்து 13_பேர் பலியான நிலையில். மரணம் அடைந்தவர்கள் இந்தியாவின் குடி மக்கள் என்ற எந்த அனுதாபமும் இன்றி
வயதில் மூத்த பொன்.ராதாகிருஷ்ணன் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.

டெல்லி முழுவதும் மத்திய அரசின் ரிசர்வ் பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லி குண்டு வெடிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன்
தொடர்பு படுத்தி முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்த வயதில் மூத்த பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு. அவர் சுயநினைவின்றி பேசுகிறார் என நினைக்கிறேன். பொன்னாரின் அனாகரிகமான பேச்சை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் குற்றம் சாட்டினர்.