• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட துரோகிகளால் தான் அதிமுக தோற்றது..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2025

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினார். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘விவசாயிகள் நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் சாலையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

அதை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தினேன். அப்போது பேசிய அமைச்சர், ‘நாங்கள் தினம் தோறும் ஒரு நாளுக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்கிறோம், ஞாயிற்றுக்கிழமை கூட கொள்முதல் செய்கிறோம்’ என்று கூறினார்.

17.10.2025 கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தது போல் தினமும் 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்திருந்தால், விவசாயிகள் கொண்டு வந்த அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்பட்டிருக்கும். அப்படி நடக்கவில்லை என்பதாலே அறிக்கை மூலம் வலியுறுத்தினேன். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதன் பிறகே கடந்த 21-ம் தேதி நேரடியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்றேன். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டபோது, விவசாயிகள் கண்ணீர் சிந்தினார்கள். நாங்கள் பாடுபட்டு உழைத்த வளர்த்தெடுத்த நெல் மணிகள் எங்கள் கண்முன்னே முளைத்து பெரும் நஷ்டத்திற்குள்ளாகி இருப்பதாக வேதனையுடன் சொன்னார்கள்.
சுமார் 15 நாட்களாக கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகள் கூறினார்கள். அப்படி கொள்முதல் செய்யப்படும்போதும், 600 மூட்டைகளுக்கு மேல் எடுக்கவில்லை என்று கூறினார்கள். சணல் சாக்குகள் இல்லை என்றும், கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல்லை எடுத்துச்செல்ல லாரிகள் இல்லை, லோடு மேன்கள் இல்லை என்று கூறினார்கள்.

இது போன்ற பிரச்சனைகள் இருப்பதால் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். இதில் என்ன அவதூறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை
அதோடு துணைமுதல்வர் டெல்டா மாவட்டத்திற்குச் சென்றார். நான் கூட பரவாயில்லை உதயநிதி டெல்டா மாவட்டத்திற்கு செல்கிறாரே, அவர் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பார், நேரடி கொள்முதல் நிலையத்திற்கு எல்லாம் செல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சரக்கு ரயில்களில் ஆய்வு செய்துவிட்டு அங்கு கொடியசைத்து விட்டு வந்து விட்டார்.
ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் 20 நாட்களாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் விவசாயிகள் சந்திக்க மனமில்லை. கொள்முதல் நிலையத்திற்குச் சென்று விவசாயிகளை சந்தித்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தால் விவசாயிகளை துணை முதல்வர் சந்திக்கவில்லை.

பருவமழையினால் 30 நாட்களுக்கு முன்பாக நடவு செய்த பயிர்கள் மழையில் மூழ்கி சேதமடைந்து விட்டன. அந்த அழுகிய பயிர்களை ஒரு பையில் வைத்து முதல்வர் ஸ்டாலிண்டம் காட்டுகிறார்கள். இந்தியாவில் இப்படிப்பட்ட முதலமைச்சர் யாருமே இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் அளிக்கவில்லை. அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்தவற்கு மனமில்லை. விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நேற்றைய தினம் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் திமுக ஆட்சியில் தான் ஓவ்வொரு ஆண்டும் சராசரியாக 42.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக ஒரு பச்சைப்பொய் கூறி இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உணவு மானிய கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளதை இப்போது சொல்கிறேன். 2022 – 23-ம் ஆண்டு 105, 106-வது பக்கம் 31.3.2022 வரை 29 லட்சத்து 48 ஆயிரம் மெட்ரிக் டன் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.‌ 2023 – 24 ஆண்டுகளில் 80 -வது பக்கம் 31.3.23 வரை 29 லட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் தான் கொள்முதல் செய்துள்ளார்கள்.
2024 -25 ஆண்டு பக்கம் எண் 101-ல் 31.3.2024 வரை 28.26 லட்சம் மெட்ரிக் டன் தான் கொள்முதல் செய்துள்ளார்கள். 2025.26 – ஆண்டு பக்கம் எண் 106-ல் 31.3.2025 வரை 28 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்துள்ளார்கள். மொத்தமாக 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரம் மெட்ரிக் டன் தான் கொள்முதல் செய்துள்ளார்கள்.

இப்படி உண்மை இருக்கும்போது எப்படி ஆண்டுக்கு 42.5 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்திருக்க முடியும். எத்தனை பொய். எல்லாம் விளம்பர மாடல் அரசு என்பது நிரூபணமாகி விட்டது. ஆக திமுக ஆட்சியில் உணவுத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் சொன்னது உண்மையா, அல்லது நேற்று தென்காசியில் முதலமச்சர் கொடுத்த தகவல் உண்மையா என்று ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். புள்ளிவிவரத்தோடு நான் தெரிவிக்கிறேன். உணவுத்துறை மானிய கோரிக்கை குறிப்பேட்டில் அமைச்சர் கொடுத்த புள்ளிவிபரத்தை தான் நான் உங்களிடம் விளக்கினேன்.

ஆனால், முதலமைச்சர் அவதூறு என்று சொல்கிறார். பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல் மணிகள் முளைத்திருப்பதை டிவியில் காட்டினீர்கள். திறந்த வெளியில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் மணிகள் முளைத்த செய்திகளை காட்டினீர்கள். அந்த செய்தியின் அடிப்படையில் தான் விவசாயிகளை சந்தித்தேன். அப்படி என்றால் நீங்கள் போட்டது எல்லாம் பொய் செய்தியா…? இந்த உண்மைகளை எல்லாம் அவதூறு செய்தியாகவே முதல்வர் நினைக்கிறார். திருச்சியில் ஒரு கி.மீ தூரம் நெல் தேங்கி கிடக்கிறது என்று செய்திககள் இன்று வந்திருக்கின்றன.

விவசாயிகள் விளைவிக்கிற நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் மீது அக்கறை இல்லாத பொம்மை முதல்வர் தான் இப்படிப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார். உணவு உற்பத்தியை பெருக்குவதில் விவசாயிகள் மும்முரமாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நெல்லை கொள்முதல் செய்ய முடிய அவல நிலையில் திமுக ஆட்சி நடக்கிறது.

அதோடு பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடு விவகாரம் அமலாக்கத்துறை முதல் உச்சநீதிமன்றம் வரை வழக்கு போயிருக்கிறது. அதிமுக ஆட்சியில் சதுப்பு நில காடுகள் பாதுகாக்கப்பட்டன. அதற்காக அம்மா அரசு மத்திய அரசின் நிதி உதவியோடு, 165.68 கோடி செலவில் தேசிய பருவநிலை மாற்ற தழுவல் நிதியை வைத்து அதை பாதுகாத்தோம். பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டம் 2018-19-ல் செயல்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை மாநகராட்சிக்கு ஒரு குறிப்பிட்ட பகுதி இருக்கிறது. அதேபோல், வனத்துறைக்கும் குறிப்பிட்ட பகுதி இருக்கிறது. சதுப்பு நில எல்லையில் இருந்து 1 கி.மி தூரத்தில் தான் கட்டடம் உள்ளி்ட்ட கட்டுமானப்பணிகள் நடைபெற வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு உள்ளது.
அதற்கு மாறாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்திற்கு அருகில் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் முறைகேடு, கையூட்டு நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சார் என்றால் திமுகவிற்கு அலர்ஜி. உங்களுக்கு நல்லா தெரியும் எந்த சார் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
எஸ்ஐஆர் என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவிற்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் சென்று ஆர்.கே.நகரில் மட்டும் 36 ஆயிரம் வாக்குகள் நீக்கி இருக்கிறோம். பல முறை அதிகாரிகளிடம் இறந்தவர்களின் பட்டியல், குடியிருப்பில் இல்லாதவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் முறையாக விசாரிக்கவில்லை. நீதிமன்றத்திற்கு சென்று தான் 36 ஆயிரம் பேரை நீக்கி இருக்கிறோம்..

அதேபோல் கரூரில் நீதிமன்றத்தின் மூலம் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கி இருக்கிறோம். 2023 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், குடிசைமாற்று வாரியத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படடு விட்டது. ஆனால் அங்கு குடியிருப்பதாக பட்டியல் தயராகி இருக்கிறது. அதை நீக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெயர் நீக்கப்படவில்லை. இது போன்ற நிலைமை எல்லாம் மாற வேண்டும்.
தகுதியான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. 234 தொகுதிகளிலும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. எடப்பாடி தொகுதியில் கூட இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள் என சுமார் 8 ஆயிரம் பேர் கணக்கெடுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி எல்லா தொகுதியிலும், 10 ஆயிரம், 15, 20, 30 ஆயிரம் என இறந்தவர்கள் பெயர்கள், வீடு மாற்றிச்சென்றவர்கள் பட்டியல் இருக்கிறது. இதையெல்லாம் சரிசெய்து, எஸ்ஐஆர் திட்டத்தின் மூலம் உண்மையான பட்டியல் வந்தால், உண்மையான தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

திமுக ஆளும் கட்சி, நாங்கள் தான் பயப்பட வேண்டும், அவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆளும் கட்சி பயப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்து விடும் என்று அச்சப்படுகிறார்கள். தோல்விக்கு ஒரு காரணத்தை இப்போதே திமுகவினர் அறிவித்து விட்டார்கள்,

யார் உண்மையான வாக்காளர்கள் என்று வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டியது மாநில அரசு அதிகாரிகள் தான். இப்போது அவர்கள் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், பணி முடிந்து மீண்டும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்து விடுவார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அப்பயிருக்க நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றுதான் நாங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.’’ என்றார்.

இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு இபிஎஸ், ‘’இவர்களுடைய சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது. இபிஎஸ்-ஐ வீழ்த்துவோம் என்று 4 ஆண்டுகளாக தினமும் டிடிவி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.
இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்கள், அது ஏற்கனவே போட்ட திட்டம் தான். இன்று நேற்றா திட்டம் போடுகிறார்கள்..? அதிமுகவில் இருக்கும் போது குழி பறித்த காரணத்தால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்த காரணத்தால் தான், 2021-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொன்னார். இவரா அதிமுககாரர்..? இவரா அதிமுகவை ஒருங்கிணைப்பவர்..? உண்மையான அதிமுககாரரின் வாயில் இருந்து அப்படிப்பட்ட வார்த்தை வராது. இவர்கள் எல்லாம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள்.’’ என்றார்.
செங்கோட்டையன் மீது நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, ‘’அதிமுகவை பொறுத்தவரை தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால், யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

டிடிவியின் பேச்சுக்கு, ‘’அதிமுகவை பொறுத்தவை எத்தனை எட்டப்பர்கள், எத்தனை துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் தலைமையில் இருப்பது உண்மையான அதிமுக. எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்று வரை அணி மாறாமல் இருப்பவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் மூவரும் இணைந்து வந்துள்ளது அரசியல் வியூகம் அல்ல.. வீணா போனவர்கள் கூட்டம். அவர்களைப் பற்றி பேசுவதே வேஸ்ட். அதிமுக பலவீனமாகிவிட்டது என்று அவர்கள் சொல்கிறார்களே தவிர, நாங்கள் பலமாக தான் இருக்கிறோம்.
கருணாநிதி இருக்கும் போதே 2011, 2021 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக கூட திமுக வர முடியவில்லை. நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் எதிர்க்கட்சியாக வந்துள்ளோம்…75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது.

அப்படி இருக்கும் போது திட்டமிட்டு அவதூறு செய்தியை பரப்புகிறீர்கள். திமுக எத்தனை தேர்தலில் தோல்வி அடைந்தது என்பது குறித்து ஏன் பேச மறுக்கிறீர்கள்… அதிமுக இல்லை என்றால் பத்திரிக்கைகளுக்கு செய்தி இல்லை. செங்கோட்டையன் அப்படி இருப்பதால் தான், ஈரோட்டில் சில இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. அந்தியூர் அதிமுக கோட்டை ஏன் வெற்றி பெற முடியவில்லை.? சேவல் சின்னத்திலேயே வெற்றி பெற்றோம். பெரியசாமி என்ற எம்எல்ஏ வெற்றி பெற்றார். உள்குத்து வேலை செய்ததால் தான் அதிமுக வெற்றி பெற முடியவில்லை. 2021-ம் ஆட்சியை பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இன்றைக்கு எல்லாம் தெளிவுபடுத்திவிட்டோம். பயிர் செழித்து வளர வேண்டும் என்றால் களைகள் எடுக்கப்பட வேண்டும். களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றும் கூறினார்