• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ByKalamegam Viswanathan

Oct 5, 2025

சோழவந்தானில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன் மாறன், பால ராஜேந்திரன், தன்ராஜ், பரந்தாமன், சரந்தாங்கி, முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் வாடிப்பட்டி பால்பாண்டியன், அலங்காநல்லூர் ரகுபதி, பாலமேடு மனோகர வேல் பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் சோழவந்தான் எஸ். எஸ். கே. ஜெயராமன், அலங்காநல்லூர் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்தராஜ், பேரூராட்சி துணை தலைவர்கள் சோழவந்தான் லதா கண்ணன், வாடிப்பட்டி கார்த்திக் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர், பொதும்பு தனசேகரன், சிறைச்செல்வன், வாடிப்பட்டி பேரூர் முன்னாள் நிர்வாகி பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சி. பி. ஆர். சரவணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவா , மருது பாண்டியன், கொத்தாலம் செந்தில், வேல், வள்ளி மயில், மணி முத்தையா, குருசாமி, செல்வராணி, விவசாய அணி வக்கீல் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தனபால், சுப்பிரமணி, ரேகா, வீரபாண்டி, முள்ளி பள்ளம் ஊராட்சி செயலாளர் கேபிள் ராஜா, மகளிர் அணி சந்தான லட்சுமி, ஊத்துக்குளி ராஜா, ராயபுரம் சிறுமணி, டிவி நல்லூர் சகுபர் சாதிக், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அயூப் கான் நாச்சிகுளம் பாஸ்கரன் இரும்பாடி பண்ணைச்செல்வம், செந்தில் தியாக முத்துப்பாண்டி, திலீபன், சங்கங்கோட்டை சந்திரன், ரவி, கண்ணதாசன், ராமநாதன், மாணவரணி எஸ். ஆர். சரவணன், தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன், செங்குட்டுவன், பங்களா மூர்த்தி, கல்லணை சேது, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.