• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய எடப்பாடியார்.,

BySeenu

Sep 13, 2025

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெனி கிளப் அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

அதிமுக பொது்செயலாளர் பழனிசாமி பேச்சு,

தமிழ்நாட்டில் விளையாட்டு முக்கியமான அங்கம் மன அமைதி, உடலை பேணிக் காக்க விளையாட்டு அவசியம். எதையும் எதிர்கொள்ளும் திறன் விளையாட்டு வீரர்களுக்கு உண்டு.

அதிமுக வை பொறுத்தவரை அனைத்து மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கும் உபகரணங்கள் வழங்க வேண்டும் என செய்தோம். 3 சதவிகித இட ஒதுக்கீடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தங்கும் விடுதிகள், சர்வதேச வீரர்களுக்கு ஊக்கத் தொகை, பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் விளையாட்டு வீரர்களுக்கான திட்டம் துவங்கப்படும்.

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.