நாகையில் நடைபெற்ற .மறைந்த முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக வர்த்தக அணி மற்றும் 27வது வார்டு திமுக சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள நாம்கோ ஒருங்கிணைந்த ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில்சுமார் 150 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார். நகர செயலாளரும், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து, நகர துணை செயலாளர்களும், நகர்மன்ற உறுப்பினர்களுமான சித்ரா, திலகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.