• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோவையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை..,

BySeenu

Jun 4, 2025

கோவையில் தீயணைப்பு துறை டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீயணைப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி சீமா அகர்வால் கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தெற்கு தீயணைப்பு துறை அலுவலகத்தில் மேற்கு மண்டல தீயணைப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய ஐந்து மண்டல தீயணைப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தீயணைப்பு துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் தேவைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் தீயணைப்பு உபகரணங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.