• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

எஸ் என் எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

BySeenu

May 17, 2025

ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தி காட்டியுள்ளார். அதில் சொந்த நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி எதிரிகளை நம் நாட்டில் இருந்து கொண்டே தாக்கினோம் என்றால் அதற்கு பிரதமர் மோடியும் ராணுவத்தில் உள்ள இன்ஜினியர்களே காரணம் என கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.

கோவை குரும்பபாளையம் பகுதியில் உள்ள எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் , ஆப்ரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டினார் அந்த ஆப்ரேஷனில் அதிக தொழில் நுட்பங்கள் பயன்படுத்தபட்டன என்றும் , நம் நாட்டில் இருந்து கொண்டே எதிரிகளை தாக்கினோம் அவற்றில் நம் நாட்டில் தயாரான ராணுவ தளவாடங்களை நாம் பயனப்டுத்தினோம் அதற்கு நம் பிரதம்ர் மோடியும் ராணுவத்தில் உள்ள உங்களை போன்ற இன் ஜினியர்களே காரணம் என பெருமையுடன் தெரிவித்த அவர் ஒரு காலத்தில் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த நிலை மாறி நாம் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம் என்றார்.

50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என்ற அவர்
இந்தியாவின் இன்ஜினியர்கள் இந்தியாவின் தொழில் நுட்ப வல்லுனர்கள் , தொழில் நுட்ப உலகில் ஆட்சி செய்கிறார்கள் , உலகத்திலேயே அதிக ஸ்டார்டப் நிறுவனங்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவரக்ளாக நம் இளம் தலைமுறையினர் மாறி கொண்டிருக்கொன்றனர் .

கம்பெனிகள் கல்லூரியில் வந்து மாணவர்களை தேர்ந்தெடுக்கும் சூழல் மட்டுமல்ல அடல் டிங்கரிங் லேப்ஸ் மூலம் மாணவர்கள் தொழில் முனைவோராக மாற்றும் கல்வி முறையாக மாற்றி உள்ளோம் என்றார். மேலும் அதனால்தான் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளோம் என குறிப்பிட்டார். மேலும் உலக அளவில் அனைத்து துறையிலும் போட்டி போடுபவரகளாக மாற வேண்டும் என்ற அடிபப்டையில் தேசிய கல்வி கொள்கை அமைக்கபப்ட்டுள்ளது என்றும் , ஸ்கிள்டு மேன் பவர் நம் பாரத தேசத்தில் இருக்கிறது அவர்கள் உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் உலக அளவில் அவர்களதான் பெரிய நிறுவனங்களில் உலகம் முழுவதும் சி இ ஓ க்களாக இருக்கிறார்கள் புதிய இந்தியா எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.

என்பதை பார்க்கிறோம் , மும்பை அஹமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் செல்ல இருக்கிறது , வந்தே பாரத் ரயில் உலகம் முழுவதும் ஏற்றுமதிசெய்யபப்டுகிறது , 50 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம் , இதற்கெல்லாம் நம் பிரதமர் நரேந்திர மோடியின் பாலிசிதான் காரணம் திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம் அதனை வெளிப்படைத்தன்மையுடன் அந்தப் பாலிசியை படைத்துள்ளோம் , 1500 க்கும் மேற்பட்ட தேவையில்லாத சட்டஙக்ளை நீக்கியுள்ளோம் , மைக்ரோ சிப் போன்றவற்றை இறக்கு மதி செய்து கொண்டிருந்தோம் இப்போது இந்தியாவில் மைக்ரோசிப் தயாரிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது , தேசத்தின் வளர்ச்சி ஐந்தாவது அனைத்து துறைகளிலும் தன்னிறைவான பொருளாதார நாடாக உள்ளது , 2047ல் நூறாவது சுதந்திரம் அடையும் போது உலகத்துக்கு வழிகாட்டும் வல்லரசு நாடாக இருக்க போகிறது நம் இந்தியா , நம் நாட்டைநாட்டை இளம் தலைமுறையினாரான நீங்கள்தான் ஆட்சி செய்யபோகிறீர்கள் என தெரிவித்தார்.