• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

இரத்ததான முகாமினை கே.டி.ஆர் தொடங்கி வைத்தார்..,

ByK Kaliraj

May 2, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உழைப்பாளர்கள் தினம்* மற்றும் பத்மபூஷன் அல்டிமேட்ஸ்டார் அஜித்குமார் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்று
சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் அன்புத்தடம் இணைந்து நடத்தும்.மாபெரும் இரத்ததான முகாமினை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி துவக்கிவைத்து சிறப்பு நிகழ்த்தினார்.

முகாமில் அன்புத்தடம் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

முன்னதாக ரத்ததான முகாமை துவங்கி வைக்க வருகை தந்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு அன்பு தடம் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.