• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது!!

ByAnandakumar

Apr 22, 2025

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் விவசாய சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, கடந்த தேர்தலின் போது திமுகவிற்கு களம் அமைத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் மதுவிலக்கு முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டனர். கோவன் போன்றவர்கள் டாஸ்மாக்கை மூட வேண்டும் என கோஷமிட்டவர்களை காணவில்லை ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது டாஸ்மாக்கை மூட வேண்டும் என கையில் பதாகை ஏந்தி போராடியவர்கள்

கனிமொழி இந்தியாவிலேயே அதிக அளவில் விதவைகள் உள்ள தமிழகத்தில் தான் விதவைகள் அதிகம். ஏனென்றால் அதற்கு டாஸ்மார்க் மது தான் என கூறினார்கள்

பீகாரில் தனி கட்சி துவங்கிய பிரசாந்த் கிஷோர் மதுவை முன்னிறுத்தினர். தமிழகத்தில் மதுவிலக்கு முன்னிறுத்தினார். பிரசாந்த் கிஷோர் பீகாரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டீக்கடைகள் இருப்பது போல டாஸ்மார்க் ஆங்காங்கே திறக்கப்படும் என தெரிவிக்கிறார். இவர்கள் அரசியல் சிந்தனையாளர்களா மக்களுடைய அறியான்மையை அறுவடை செய்யும் பிற்போக்கு சக்திகள் என்றார்.

வரும் 2026 தேர்தலில் கள் இயக்கம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி எங்களிடம் உள்ளது.