• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ByKalamegam Viswanathan

Apr 22, 2025

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேமுள்ளி பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்தநாதன் என்பவரது மகன் முரளி வயது 19 மதுரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை முள்ளி பள்ளத்தில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய காடுபட்டி போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.