• Tue. Apr 30th, 2024

பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் ரூ.75,000 நிதி உதவி

Byகாயத்ரி

Dec 2, 2021

2005ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் 75,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ஆம் ஆண்டு 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.


இந்த உதவித் தொகையின் மூலம் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். அதேபோல இந்த உதவித் தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை மாணவரிகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.


இவர்களின் உயர்கல்வி மற்றும் பராமரிப்பு தேவைகளின் போது இந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித் தொகையைப் பெற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பெற்றோரின் இறப்பு சான்றிதழ், உடற்கூறு சான்று, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவற்றோடு இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *