நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இன்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ பெரிய அய்யனார் திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று இந்த திருக்கோயில் ஆனது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில் என்றும் மிகவும் பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இதனை தொடர்ந்து விராலிமலை… Read more: சட்டப்பேரவையில் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,
தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்ததற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தேமுதிக தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய்.எஸ்.டி.சமுத்திரபாண்டி மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையில் மு க அழகிரி தீவிர ஆதரவாளரான எஸ் ஆர் கோபி தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை தமிழக முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எஸ் ஆர் கோபி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் நினைத்துக் கொண்டனர். உடன் முன்னாள் அமைச்சர் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே செல்லூர் ராஜு இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிமுகவில் இணைந்த முன்னாள் துணை… Read more: அதிமுகவில் இணைந்த மு க அழகிரியின் தீவிர ஆதரவாளர் ..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சிப்பிபாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று இளைஞர்கள் (பர்மா) மியான்மரில் தீவிரவாதிகளின் குடியிலிருந்து காப்பாற்றி உயிருடன் ஊர் திரும்பிட பெரும் முயற்சி மேற்கொண்டு மனித நேயத்துடன் உதவிய மதிமுகவின் இளம் தலைவர் துரை வைகோவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சிப்பிபாறை கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த துரை வைகோவிற்கு சிப்பிப்பாறை கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ தனக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல்… Read more: நிகழ்ச்சியில் தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து கண்கலங்கிய துறை வைகோ …
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திமுக துணை அமைப்பு செயலாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து, வாழ்த்து பெற்ற மாநில திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் பி.டி.செல்வகுமார்.
இந்தியாவின் தென் கோடி சர்வதேச சுற்றுலா பகுதியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தரை வாடகை அடிப்படையில் 50_ ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தும் குத்தகை காரர்களுக்கு கடைகளை உடனே அகற்று என நோட்டீஸ்.! கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரம் சட்ட சபையில் இன்று வைத்த கோரிக்கை. அண்மையில் கன்னியாகுமரி அறநிலையத்துறை, கடந்த 50_ ஆண்டுகளுக்கு மேலாக தரை வாடகை உரிமையில். கடை கட்டி… Read more: பகவதி அம்மன் கோயிலுக்கு முறையாக அனுமதி பெற்று கடை நடத்துபவர்களுக்கு நோட்டீஸ்..!?
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் சட்டவிரோதமாக அகற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகவலின்படி, திருநீர்மலை பெரிய ஏரியில் இருந்து தினமும் சுமார் 500 லாரி அளவுக்கு மண் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அகற்றப்பட்ட மண் திருநீர்மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குவித்து வைத்து, எந்தவித அனுமதியும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஏரியில் இருந்து மண் தொடர்ந்து அகற்றப்படுவதால், நீர்நிலையின்… Read more: சட்டவிரோதமாக லாரிகளில் மண் அகற்றப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள்..,
கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மயில்சாமி அண்ணாதுரை, கோவையில் காந்திபுரம் மிகவும் முக்கியமான இடம் நாம் இங்கு நிற்பதற்கு மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் மிகப்பெரிய உதவி… Read more: சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை திறந்து வைத்த மயில்சாமி அண்ணாதுரை..,
பரமபூஜ்ய ஸ்ரீ ராகவேந்திர குரு சர்வபௌமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் கோவையில் துவங்கியது. ராம்நகர்,பகுதியில் உள்ள , ஸ்ரீ ஐயப்பன் பூஜை சங்கம் வளாகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள இதில்,மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் ஜன்ம தினோத்சவத்தை நினைவுகூரும் வகையில்,பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பாரம்பரியமாக பால்குண மாதத்தில் நடத்தப்படும் இதற்கான துவக்க விழாவில், மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திரர் வித்யாதீஷர் ,உடுப்பி ஸ்ரீ பாலிமாரு… Read more: கோவையில் 33-வது ஸ்ரீ ராகவேந்திர சப்தாஹ மஹோத்சவம் ..,
நிலக்கோட்டையில் பட்டப் பகலில் VAO வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி (திங்கட்கிழமை) பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 42 பவுன் தங்க நகையை திருடி சென்றது தொடர்பாக… Read more: விஏஓ வீட்டில் 42 பவுன் நகை திருட்டு: வாலிபர் கைது..,