நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஹார்விபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மதநல்லிணக்க பிரச்சார பேரணி ஹார்விப்பட்டி கலையரங்கத்தில் தொடங்கி திருநகர் இரண்டாவது விருத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற இருந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 50க்கும் மேற்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஹார்விபட்டியிலிருந்து பேரணி துவங்க இருந்த நிலையில் அனுமதியின்றி நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறையினர் தடுத்து… Read more: மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ் ஆகியோர்கள் ஏற்பாட்டில் அக்கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுக ஓபிஎஸ் அணியில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் முன்னிலையில் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த… Read more: ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி..,
இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி ஒட்டம்பட்டி கோவில் தெருவில்வாறுகால் பணிக்காக நான்கு மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலையானது இதுவரை செப்பனிடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. ஒரு சில இடங்களில் ஒரு வழி சாலை போல குறுகளாக உள்ளன. மேலும் ஒரு சில இடங்களில் பாலத்தில் மிகப்பெரிய அளவில் உடைப்புகள் ஏற்பட்டு இரண்டு முதல் மூன்று அடி ஆழம் வரை உள்ளது. இந்த சாலையில் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளது. மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியில் பள்ளி மாணவ,… Read more: பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு நுகர்வோர் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் சாமுவேல் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அமர்நாத், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், தனி வட்டாட்சியர் ஆனந்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ரவிக்குமார்,… Read more: தேசிய நுகர்வோர் தின விழா..,
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து வியாபாரிகள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வியாபாரிகள் மத்தியில் ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த சங்கம் தொடங்கப்பட்டதாக கூறினார். பொருளாதார முன்னேற்றத்திற்காக வியாபார வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரி 4 ஆம் தேதி கோவையில் வியாபாரிகள்… Read more: திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம்..,
வேலம்மாள் கல்வி குழுமம் சேர்மன் முத்துராமலிங்கம் பேசும்போது இணைப்பு ” (THE CONNECT)-ன் முதல் முயற்சியாக. இளங்கலை, முதுகலை பட்டம் படித்தவர்கள் கூட வேலை வாய்ப்பின்மையினால், குறைந்த கல்வித் தகுதிகளுக்கான வேலைகளுக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் விண்ணப்பித்து போட்டியிடும் நிலையும், ஆண்டு வருமானமான 4 லட்சம். 5 லட்சம் வேலைகளுக்கு செல்வதையே பெரியதாக எண்ணும் நிலையும் மாறி, பட்டம் பெற்றவர்கள் அவர்களது பட்டக்கல்வியறிவை பயன்படுத்தி, சொந்தமாக தொழில் தொடங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை… Read more: தொழில்முனைவோராக வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்ட அரெஷிடோ இஷின்றியூ கராத்தே கழகம் சார்பில், மாநில அளவிலான நான்காவது ஆண்டு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் வாணி மகாலில் நேற்று நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மறைந்த சிகான் ஹுசைனி நல்லாசியுடன், மாநில அளவிலான இப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர்,நாகை, மயிலாடுதுறை,திருவாரூர் மன்னார்குடி கும்பகோணம் நெல்லை சென்னை கடலூர் பெரம்பலூர் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 900 மேற்பட்ட, 5 வயது முதல் 15 வயதுடைய பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்குசிகான் ஹுசைனி இஷின்றியூ… Read more: கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்..,
மத்திய அரசு மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து தேசத்தந்தை யின் பெயரை நீக்கியதை கண்டித்தும் பெண்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் நூருல் இமு .மற்றும் அப்சீனா ஆகிய 2 பேர் ஊட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கினார். கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரியிலிருந்து. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ,உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வழியாக அடுத்த மாதம் சென்னை சென்றடைகிறது.… Read more: 2 இளம் பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,
புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் கட்டிடத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இதில் ஜாக்டோ ஜியோ வில் உள்ள உறுப்பினர்களாக இருக்கும் ஆசிரியர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் தமிழக அரசு 21 தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியதோடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர் ஆனால் ஆட்சி… Read more: ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு..,
சாணி வயல் கேடயப்பட்டி ஆகிய ஊர்களை பதற வைக்கும் பல்லாங்குழி சாலை மரண குழிகள் இருப்பதை அரியாமல் சென்று வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்! முழுமையாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை ! திருச்சி கீரனூர் வரை பூங்குடி மேக்கடிப்பட்டி கேடயப்பட்டி சானிவயல் சானி வயல் கண்டியர்சாலை வழியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரையிலும் சென்று வருகிறது. இந்த ஊர்களில் பள்ளிக்கூடங்கள் புட் கம்பெனி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுவது வழக்கம்.… Read more: வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்!