நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர்.
தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய தலைப்புகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது “அரசியல் டுடே” இணையதளங்களில் தொடர்ச்சியாக தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன்சக்கரவர்த்தியின் அடாவடி பற்றி செய்திகளாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டிருந்தோம். நமது அரசியல் டுடே இணையதள செய்தியைக் கண்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கடந்த 29.03.25 அன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரச்னைக்குரிய இடமான சுகதேவ் தெருவில் ஆய்வு செய்தார். அப்போது அந்த தெருவில் பாதிவரை சிமென்ட் ரோடு போட்டு நிறுத்தியதும், தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளான பேரூராட்சிகளின் இணை இயக்குனர் கிறிஸ்டோபர்தாஸ், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜெர்ஸி ரோஸ்லின் அன்புராணி ஆகியோரை நேரில் வரவழைத்து, மக்களுக்காகத்தான் அரசாங்கம். நீங்க எல்லாம் அதிகாரிகள் என்ற போர்வையில யாருக்கு வேலை பார்க்கிறீங்க-? உங்கள மாதிரி ஆளுகளால கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர்…மக்களுக்காக வேலை பாருங்க. இரண்டு தினங்களுக்குள்ள துண்டிக்கப்பட்ட பைப்பும் போட்டுருக்கனும். இந்தப் பகுதியில ரோடும் போட்டு முடிச்சிருக்கனும் என அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்றார். ஆனா எம்.பி தங்கதமிழ்ச்செல்வன், அதிகாரிகளை எச்சரித்து விட்டு சென்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்று வரை சொல்லிச் சென்ற வேலை எதுவும் நடைபெறவில்லை என்று தேனி பழனிசெட்டிபட்டி யிலிருந்து நம் அலுவலகத்திற்கு அவலக்குரலாக தகவல் வர உடனே அங்கு ஆஜரானோம்.
தேனி எம்.பி யின் ஆய்வும், அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் பேசிய வழக்கறிஞர் கண்ணதாசன் ..,
கண்ணதாசன்
“எம்.பி வந்து சம்மந்தப்பட்ட இடத்தை நேரில்பார்த்ததும், ஆஹா.. எம்பியே நேர்ல வந்து பாத்து சொல்லீட்டார்ல.. ரெண்டுநாள்ல ரோடும் வந்துரும், கட் பண்ணுன குழாயும் வந்துரும்னு சந்தோஷப்பட்டோம்.. ஆனா எதுவும் நடக்கல.எங்க ஊர் பொறுத்த அளவில் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி வைத்தது தான் சட்டம். எம்.பி குழாய்க்கு கனெக்ஷன் குடுக்கச் சொன்னதால இப்ப அந்த குழாயை சேர்மன் உத்தரவில் பேரூராட்சி ஊழியர்கள் பிடுங்கி எடுத்துச் சென்று விட்டார்கள். எடுத்து செல்லுறப்ப கேட்டால் சேர்மன் உத்தரவு குழாயை எடுத்துட்டு மட்டும் வரச் சொன்னாரு …வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது! எதுவா இருந்தாலும் சேர்மன் கிட்ட கேட்டுக்கங்க என்று சொல்லிட்டு போயிட்டாங்க … உடனே சேர்மன் கிட்ட போய் கேட்ட.., “எம்பி கிட்ட சொல்லீட்டீங்கள்ல.. வேலை நடக்கும் போய்ட்டு வாங்க எல்லோரும் என மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிட்டாரு”. எங்க ஊரை பொறுத்தவரை இங்கு நானேராஜா, நானே மந்திரிங்கிறது சேர்மன் மிதுன் சக்கரவர்த்திதான். இவரை பகைத்துக்கொள்ள பயந்து அதிகாரிகளும் மௌனமாய் இருக்கிறார்கள். எம்பி என்ன? யார் வந்து சொன்னாலும் இவரை கேட்கப்போவதில்லை, இது எங்கள் தலையெழுத்து.. ஆண்டவரிடமும் சொல்லிவிட்டோம்… ஆள்பவர்களிடமும் சொல்லிவிட்டோம்…இனி இவர்களுக்கு எதிராக ஊரே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டியது தான் பாக்கி” என்றார் கண்ணதாசன் வேதனையாக .
செல்வராஜ்
மேலும் இது குறித்து பழனிச்செட்டிபட்டி திமுக பேரூர்செயலாளர் செல்வராஜ் இடம் கேட்ட போது..,
“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி செய்யும் அடாவடிகள் குறித்து கட்சி மேலிடத்திலும் தெரியப்படுத்தி உள்ளோம். தேனி கலெக்டர் கிட்டயும் புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்க அண்ணன் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் வந்து பிரச்சனைக்குரிய இடத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றார்கள். பேரூராட்சியின் ஏடி, செயல் அலுவலர் போன்றவர்கள் ஓய்வு பெறும் நிலையில் இருப்பதால் அவர்களை கோர்ட்டு, கேஸ் என இழுத்தடிப்பேன் என்று மிதுன் சக்கரவர்த்தி மிரட்டுவதால் அவர்கள் சேர்மன் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கிரமங்கள், இடையூறுகள் செய்யும் மிதுன் சக்கரவர்த்தி அதிகாரத்தை தட்டி கேட்க நாதி இல்லை. அதிகாரிகளும், அலுவலர்களும் சேர்மனுக்கு பயத்தால சப்போர்ட்டாக இருக்கிறாங்க. இணைப்பு துண்டிக்கப்பட்ட தெருக் குழாய்க்கு இரண்டு நாளில் இணைப்பு வழங்க எங்க அண்ணன் எம்.பி உத்தரவிட்டு போன மறுநாளே, தெருக்குழாய் இருந்த அடையாளமே தெரியாமல் பிடுங்கி எடுத்துச் சென்றார்கள்.. இங்கு எம்.பி பேச்சுக்கு மரியாதை இல்லை.எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா.., நான் தா ராஜா என ஊருக்குள் எங்க கட்சிக்காரங்க கிட்டேயே பேசி வராரு மிதுன் சக்கரவர்த்தி.மேலும் 8வது வார்டுல குறிப்பிட்டு ஒரு தெருவே குறி வச்சு ஆக்கிரமிப்பு இருப்பதா உருவாக்குன புகார்தாரர் வேற யாருமில்லை சேர்மன் ஒட வலது கை மாமா இளையராஜா தான் இந்த கொடுமையை எங்க போய் சொல்ல ஊருகே தெரியும். நானே நொந்து போய் இருக்கிறேன்” என்றார் வேதனையாக.
இவர்களது குற்றச்சாட்டுகள் குறித்து தேனி பழனிசெட்டிபட்டியின் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியை தொடர்பு கொண்டோம்.., நம் தொடர்பு தொடர்ந்து துண்டிக்கப்படவே
கிறிஸ்டோபர் தாஸ்
மேலும் இது குறித்து, தேனி மாவட்டத்தின் பேரூராட்சிகளின் இணை இயக்குநர் கிறிஸ்டோபர் தாஸ்யை தொடர்பு கொண்டு பேசினோம்..,
“பழனிசெட்டிபட்டி விவகாரம் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.நான் சேர்மன் சொல்றத கேக்குறதா? எம்.பி சொல்றத கேக்குறதா?நான் லீவு போட்டு போக போறேன்” என்றார் படபடப்பாக.
இந்த பிரச்சனையை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவெடுத்து இது குறித்து தேனி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம்..,
தங்க தமிழ்ச்செல்வன்
“சம்பந்தப்பட்ட அந்த தெருவுக்கு நானே நேரில் சென்று பார்வையிட்டேன். தெருவில் அரைகுறையாக போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையையும், இணைப்பு துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்யையும் இரண்டு நாளில் சரி செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரியிடம் சொல்லிவிட்டு வந்தேன், இன்னும் வேலை செய்து முடிக்கவில்லையா ? என்றவரிடம்,
நீங்கள் சொல்லிவிட்டு வந்த பின்பு தான் அந்த தெருக்குடிநீர்குழாய் இருக்கிற இடமே தெரியாமல் பிடுங்கிக் எடுத்து சென்று விட்டார்கள் என்றதும், என்ன குழாய் பிடுங்கி எடுத்து சென்று விட்டார்களா?
“இப்ப நான் ஏடி கிட்ட பேசுறேன் என்றவர், இதற்கு சரியான தீர்வு கிடைக்காமல் விடமாட்டேன், இந்த பிரச்சனையை நானே களத்தில் இறங்கி முடித்து வைக்கிறேன்” என்று தங்க தமிழ்ச்செல்வன் உத்வேகத்துடன் பேசினார்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
இந்த குறளை தேனி பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி படிக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், சப் இன்ஸ்பெக்டர்கள் காதர் மைதீன், ராம்செட் மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர், அப்போது சோதனையின் போது… Read more: வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது..,
புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம் 721 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று 18/07/2026 வழங்கினார்.… Read more: ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,
கோவையில் நடைபெற்ற என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டியில், 80-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்.உற்சாகமாக பங்கேற்றனர். கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும், தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு மேம்பாட்டுப் பள்ளியில், “தியாகி என்.ஜி. இராமசாமி நினைவு சுழற்கோப்பை–2026” மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன… மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில், கோவை மாவட்டத்தின் 80-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த… Read more: கோவையில் என்.ஜி.ஆர். சுழற்கோப்பை விளையாட்டு போட்டி.,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த குலசேகர பாண்டிய மன்னர் காலத் தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு முகமாக வீட்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்சனைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பூஜைகளை பட்டர் கிருஷ்ணகுமார் செய்தார். ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். அதேபோல் தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகரில்உள்ள ஐயப்பன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டுசிறப்பு அலங்காரம்… Read more: ஆடி மாத வெள்ளிக்கிழமைஅம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை..,
அக்குவா யோகா எனும் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்யும் முயற்சியில் 7 மணிநேரம் யோகா செய்து 60 வயதில் ரமா லட்ஷ்மி ராஜா உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கடந்த 25 ஆண்டுகள் மேல் யோகா படிக்க ஆரம்பிச்சேன். ஆரோக்கியத்துக்காக யோகா படிச்சேன். உங்கள் எல்லாருக்கு பிடித்த மாதிரி தண்ணீல வளையாடுவது எனக்கும் பிடிக்கும். ஆகையால், மூச்சு பயிற்சியை தொடர்ந்து பண்ணிட்டு வரும்போது தண்ணீல மெதந்து பார்க்கலாம் சொல்லி முயற்சி… Read more: 7 மணிநேரம் நீரில் மிதந்தபடி யோக செய்து உலக சாதனை – 60 வயதில் ரமா லட்சுமி ராஜா அசத்தல்!!!
தமிழ்த் திரையுலகில் நடிப்பதைத் தனது கனவாகக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் ராஜேஷ். இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் தமிழை முறையாகக் கற்றுக் கொண்டு சினிமாவுக்கான நடனம், சண்டைப் பயிற்சிகள்,நடிப்புப் பயிற்சி வகுப்புகள் என திரைப்படத்தில் நடிப்பதற்குத் தகுதியான எல்லாமும் முறையாகக் கற்றுக்கொண்டு இருக்கிறார். இவர் இரண்டு புதிய தெலுங்குப் படங்களில் நடித்தும் வருகிறார். இருந்தாலும், இவர் தமிழ் சினிமா மீது ஈடுபாடும் பற்றுதலும் கொண்டவராக இருக்கிறார்.காரணம், தமிழ்த் திரையுலகம் புதிய திறமைசாலிகளுக்கு எப்போதும் வாய்ப்பு கொடுத்து… Read more: தமிழ்ப் படத்தில் நடிப்பது என் கனவு -ஆந்திர நடிகர் ராஜேஷ்!
கோவையில் பேரூர் தமிழ்க் கல்லூரி மற்றும் பல்சமயம் நல்லுறவு இயக்கம் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நிகழ்த்தப்பட்டது. பல்சமயம் நல்லுறவு இயக்கம் சார்பில் போதை பொருளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் வடிவிலும் ,பேரணி மூலமாகவும் பல்வேறு நிகழ்சிகளை… Read more: கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி..,
விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த ஊரான விருதுநகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாடார் மகாஜன சங்கம் சார்பாக நடைபெற்ற கல்வி திருவிழாவில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும்… Read more: காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆண்டாள் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பித்தல், பட்டாசு கடைகளில் உரிமத்தை புதுப்பித்தல்,பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறைப் பணிகளுக்கு முறைகேடாக பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணி அளவில் அலுவலகப் பணி நேரம் முடிவடைந்து ஊழியர்கள் வீடு திரும்பத் தயாராக இருந்த நிலலயில், தமிழ்நாடு… Read more: வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை..,
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் பால்பண்ணையிலிருந்து தூத்துக்குடி ஆவின் பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. சின்ன ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். .மேலும் கண்டெய்னரில் இருந்த மூன்றரை டன் எடை கொண்ட பால் பக்கெட்கள் அனைத்தும் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் சாலையில் கொட்டியது. சம்பவம்… Read more: சாத்தூர் அருகே பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!