உதித் நாராயண் ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். உதித் நாராயண் 1955 இல் நேபாளத்தினைச் சேர்ந்த தந்தை ஹரேகிருஷ்ணா ஜா மற்றும் இந்தியாவில் பிறந்த தாய் புவனேஸ்வரி ஜா ஆகியோருக்கு மகனாகப் டிதம்பர் 1 ஆம் தேதி பிறந்தார். இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன.
இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். அவர் 4 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் மற்றும் 5 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அந்த விருதுக்கு 20 முறை பரிந்துரைக்கப்பட்டதுடன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
1980 இல் பாலிவுட் பின்னணியில் அறிமுகமான பிறகும் அவர் சிறப்பான இடத்தினைப் பெற நிறைய போராட வேண்டியிருந்தது. 1980 ஆம் ஆண்டில் யுனீஸ்-பீஸ் திரைப்படத்தில் பாலிவுட் பின்னணிப் பாடகர்களான முகமது ரஃபி மற்றும் 1980 களில் கிஷோர் குமார் ஆகியோருடன் அவர் பாடினார்.
அவர் இறுதியாக 1988 ஆம் ஆண்டில் அமீர் கான் மற்றும் ஜூஹி சாவ்லா நடித்த கயாமத் சே கயாமத் தக் திரைப்படத்தில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார், அவரது பாடல் “பாப்பா கெஹ்தே ஹைன்” அவரது குறிப்பிடத்தக்க பாடலாக அமைந்தது, இது 1980 களில் அவரது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றது, மேலும் அவர் பாலிவுட் பின்னணி பாடலில் தன்னை முன்னணி பாடகராக நிலைநிறுத்திக் கொண்டார். பிலிம்பேர் விருதுகளின் வரலாற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விருது வென்ற ஒரே ஆண் பாடகர் உதித் நாராயண் பிறந்த தினம் இன்று..!