• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பாலியல் வன்கொடுமை எதிர்த்து, தவெக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ByP.Thangapandi

Mar 8, 2025

உசிலம்பட்டியில் சர்வதேச மகளீர் தினத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் முன்பு, சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய், தொகுதி மகளீரணி தலைவர் ஆனந்தி தலைமையிலான நிர்வாகிகள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.