• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது, தப்பிக்க முயற்சி செய்யும் போது கை முறிவு

ByKalamegam Viswanathan

Oct 6, 2024

மதுரை சோழவந்தான் அருகே மது போதையில் ஏழு வயது சிறுவனை கொலை செய்த கொலையாளி அய்யனார் கைது. தப்பிக்க முயற்சி செய்யும்போது கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யனார் வயது 40. இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி அவரது மனைவி தவமணி மற்றும் முத்துச்சாமி மகள் அன்பரசி கணவரை விட்டுப் பிரிந்து அன்பரசி மற்றும் அவரது மகன் மிதுன் மாதேஷ் பாண்டியன் இருவரும் முத்துசாமி விட்டில் இருக்கின்றனர்

இந்நிலையில் 03.10.24 வியாழன் அன்று இரவு முத்துச்சாமி அவரது மனைவி தவமணி பேரன் சிறுவன் மிதுன் மாதேஷ் பாண்டியன் ஆகியோரை அய்யனார் மது போதையில் வீடு புகுந்து கத்தியால் சரமாரி குத்தியுள்ளார்.

இதனால் முத்துச்சாமி தவமணி சிறுவன் மிதுன் ஆகியோர் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு அப்பதான நிலையில் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சோழவந்தான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் தலையில் வெட்டுப்பட்டு பலத்த காயம் அடைந்த சிறுவன் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,

சோழவந்தான் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர், விசாரணையில் ஐந்து வருடங்களுக்கு முன் முத்துசாமி மகன் விவேக் மற்றும் அய்யனார் மனைவி உமா ஆகியோர் இடையே தகாத உறவு இருந்து இருவரும் விட்டை விட்டு ஓடி விட்டதாகவும், இதனால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விரக்தியில் இருந்த அய்யனார் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது,

இதனால் சம்பவத்தன்று சில உறவினரின் தூண்டுதல் காரணமாக மதுபோதையில் ஆத்திரம் அடைந்த அய்யனார் முத்துசாமி அவரது மனைவி மற்றும் பேரனை சரமாரியாக வீடு புகுந்து வெட்டிதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட அய்யனாரை சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் தனி பிரிவு போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அய்யனாரை கைது செய்ய முயன்ற போது அய்யனார் தப்பி ஓட முயன்று வைகை ஆற்று பாலத்தில் இருந்து குதித்த போது அய்யனாருக்கு கை முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐந்து வருடத்திற்கு முன் நடந்த கள்ளக்காதல் உறவால் ஒன்றும் தெரியாத சிறுவன் கொலை செய்யப்பட்டது. திருவேடகம் பகுதியில் மிகுந்த பரிதாபத்தையும் சோகத்தையும் ஆழ்த்தியுள்ளது.