• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆசனங்கள் செய்து பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளி குழந்தைகள் உலக சாதனை

BySeenu

Oct 6, 2024

எண்பது குழந்தைகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல். சாதனை பதக்கங்களுடன் கோவை திரும்பிய பள்ளி நிர்வாகிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…

கோவையை அடுத்த பொள்ளாச்சி மற்றும் கோட்டூர் மலையாண்டி பட்டினம் ஆகிய இரு இடங்களில் பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது.

2 வயது முதல் ஏழு வயதிலான குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வரும் நிலையில்,கடந்த 2 ஆண்டுகளில் 3 யோகாவில் 3 உலக சாதனைகளை படைத்துள்ளனர்.

குறிப்பாக, பொள்ளாச்சி பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சியில்,2 வயது முதல் ஏழு வயது வரையிலான மழலை குழந்தைகள் 30 நிமிடங்களில் 120 ஆசனங்களை செய்து யோகாவில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

உலக அளவில் மழலை குழந்தைகள் செய்த இந்த சாதனை உலக அளவில் முதல் சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இவர்களது இந்த சாதனை குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்நிலையில் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது.

இதில் பள்ளியின் முதல்வர் கனகதாரா, தாளாளர் கவுதமன் மற்றும் யோகா பயிற்சியாளர் டாக்டர் அகிலாண்டேஸ்வரி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் கோவை திரும்பியவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இது குறித்து பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியின் முதல்வர் கனகதாரா மற்றும் யோகா பயிற்சியாளர் டாக்டர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் செய்தியாளர்களிடம்
பேசினர்.

அப்போது யோகா பயிற்சிகளை அனைத்து தரப்பினரும் செய்து கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகள் இந்த சாதனையை செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டுகளில் இதே குழந்தைகள் மாநில அளவில் ஏழு முறையும்,தேசிய அளவில் 6 முறைnயும்,சர்வதேச அளவிலான போட்டிகளில் 5 முறையும் கலந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளதாக தெரிவித்தனர்.