• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அதிமுக நகர செயலாளர் 1 ஆண்டு சிறை

Byதரணி

Aug 24, 2024

வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., நகர செயலாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை , ரூ.5 ஆயிரம் அபராதம் – நிலக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர்முகமது (47), தமிம்அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி இணைந்து தாக்கினர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் வழக்கு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனை , ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.