வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயின் அருவியில் ஐந்தாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க ஐந்தாவது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் தடை தொடர்கிறது.இதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் இயற்கை மட்டும் பார்த்து ரசித்துக்கொண்டு மட்டும் தான் சொல்கிறார்கள்.குளிக்க தடை இருப்பதால் குளிக்க முடியவில்லை என்ற வேதனையோடு சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர்.




