இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் உடையார், நெல்லை பாஜக மாவட்ட தலைவர் தமிழ்செல்வனுடன் பேசிய ஆடியோவில் உடையார் வெளிப்படுத்திய தமிழ் நாட்டில் கலவரம் செய்தால் தான் பாஜக வளரும், வெற்றி பெரும் என்ற பேச்சு குறித்து, உதவி ஆய்வாளர் துரை புகாரின் அடிப்படையில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் உடையார் மீது 4_பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.
இவ்வளவு பிச்சனைக்கும் நெல்லை தொடர் வண்டியில் காவல் துறையிடம் சிக்கிய பணம் 4 கோடி தனது அல்ல என நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில் ரூ.4 கோடி க்கு உரிமை யாருக்கு என்ற கேள்வி நெல்லையை கடந்து தமிழகம் எங்கும் ஒரு பெரிய கேள்வி குறியை மக்கள் மனதில் எழுந்துள்ளது.