• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி 2பேர் உயிர் இழப்பு

ByN.Ravi

May 11, 2024

மதுரையில இரவு செய்த பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் டிவிஎஸ் நகர் துரைசாமி ரோடு பகுதியில், வசித்து வரும் முருகேசன் அவருடை, மனைவி பாப்பத்தி மற்றும் இவர்களுடைய மகன் சிறுவன் உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் நிலையில், கடையை அடைத்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவியும் , சைக்கிலில் மகனும், சந்தான ரோடு பகுதியில் சென்ற பொழுது மழை மற்றும் பலத்த காற்று வீசியதால், மின்சாரம் வயர் அறுந்து தொங்கிய படி இருந்துள்ளது. முதலில் சிறுவன் மின்சார வயர் தொங்கியதை பார்த்து கடந்து சென்று திரும்பி பார்க்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பா முருகேசன் மற்றும் அம்மா பாப்பாத்தி வரும் பொழுது அவர்கள் மீது மின்சார வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே சிறுவன் கண் முன் துடிதுடித்து இறந்தனர். இதைப் பார்த்த அச்சிறுவன் கூச்சலிட்டான். அப்பகுதி மக்கள் சிறுவனை சத்தத்தை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்வரிய ஊழியர்கள் அப்பகுதியில் மின்சாரத்தை தடை செய்தனர். மேலும், மின்வரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பரிதாபமாக இருந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும், இதுபோன்ற கோடை காலங்களில் செய்யக்கூடிய கனமழையின் போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் கம்பிகளை ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், கம்பி அடைந்து விழுவது தொடர்பான பலர்களை அழைப்பதற்கான சிறப்பு புகார் எண்களை அறிவிக்க வேண்டும் எனவும், பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.