• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி – விழிப்புணர்வு உலக சாதனை!

Byஜெ.துரை

Apr 29, 2024

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களை வெள்ளை நிற ஏஞ்சல் உடையில் அழகுபடுத்தி விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

“பெண்கள் தேவதைகள் அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்”என்ற விழிப்புணர்வு சாதனை நிகழ்ச்சி டாலப் பை மனோ மேக் ஓவர் ஆர்டிஸ்ட் நிறுவனத்தலைவர் மனோகரி தலைமையில் நடைபெற்றது

இதில் 100 பெண் மேக்கப் கலைஞர்கள் தங்களது மாடர்ன்களுக்கு வெள்ளை நிறை உடையில் தேவதையை போல் அழகுப்படுத்தி, தனித் தனியாக நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கலம் புக் ஆப் ரெகார்ட் சாதனைகளை நிகழ்த்தினர்.

இந்த உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் கலாம் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஐகிரி சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கினார்.