சிவகங்கையில் வெளியான ரஜாக்கார் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை காந்தி வீதியில் உள்ள திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சி மாவட்டத்தலைவர் முகமது அசார் தலைமையில் சுமார் 18 பேர் முற்றுகையிட்டு கண்டன முழக்கமிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த நகர காவல் ஆய்வாளர் கோட்டை சாமி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சு நடத்திய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.