• Sun. Apr 28th, 2024

சிவகங்கை மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா

Byகுமார்

Mar 15, 2024

அருள்மிகு ஸ்ரீ மந்தை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா பொட்டப்பாளையம் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் விருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக தமிழர்களின் பாரம்பரிய மாபெரும் கிடா முட்டு விழா நடைபெற்றது. இந்த கிடா முட்டு விழா உயர்நீதிமன்ற உத்தரவுன்படி நடைபெற்றது. இந்த கிடா முட்டு விழாவில் 120 ஜோடி கிடாக்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கேரளா மாநிலம் கொச்சினிலிருந்தும் கிடாக்கள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கிடாக்களுக்கு பிரிட்ஜ், பீரோ, ரேஞ்சர் சைக்கிள், அண்டாக்கள் வழங்கப்பட்டது. விழாவினை பொட்டபாளையம் கிராம பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்து கிடாக்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின்பு சண்டையில் பங்கு பெற்றன. இந்த கிடா முட்டு போட்டியினை பொட்டப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *