• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில், 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி..,

Byகுமார்

Jan 7, 2024

மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்ட மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட அரசு காஜி சபூர் முகைதீன் அவர்கள் கலந்துக்கொண்டார். இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் கலந்துகொண்டு, 2 வீட்டாரின் சம்மதத்தோடு வரன் முடிவு செய்துள்ளனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமண தகவல் மையத்தின் நிறுவனர் கூறுகையில்,
இந்த திருமண தகவல் மையத்தின் மூலம் ஏற்கனவே 10,000 ற்கு மேல் திருமணங்கள் நடத்தி முடிந்துள்ளதாகவும், இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சுமார் 500 ஜோடிகளுக்கு வரதட்சணை இல்லாமல் வரன் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல் தெரிந்துள்ளது. உன் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் ஏழை, பணக்காரர் பேதம் இன்றி அனைவரும் ஒரு தாய் மக்களாக இணைந்து மனம் முடிக்கின்றனர் என கூறினார்.