உலகம் முழுவதும் கொண்டாடும் இயேசு பிறப்பின் கொண்டாட்டமான கிறிஸ்துமஸ் நள்ளிரவில் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலம் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில். கத்தோலிக்க கிறித்தவர்கள் மட்டும் அல்லாது பல் சமய மக்கள் பங்கேற்ற நள்ளிரவு திருப்பலியில் ஏராளமான பன்மொழி சுற்றுலா பயணிகளும் பங்கேற்று கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பித்தார்கள்.



