தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது.
அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 46 வயதான மகேஸ்வரி என்ற பெண் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
உடனனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார்.
பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாரைப்பாம்பை வனப்பகுதிக்குள் விட்ட தீயணைப்பு வீரர்கள்.,
- கழிவறையை இடித்த முன்னாள் கவுன்சிலர் மருமகன் கைது..,
- எழுச்சிப்பயணம் 50வது நாள் கடந்த நிலையில் வழிபாடு..,
- 42 நாள் குழந்தையை கொலை செய்த தாய்..,
- வாக்குவாதத்தில் ஈடுபட்டதிமுக மாமன்ற உறுப்பினர்..,
- துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,
- போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,
- மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
- இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..,
- 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!