மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேரூர் திமுக சார்பாக கோடை கால வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ ஆலோசனையின் பெயரில். தொகுதி பொறுப்பாளர் சம்பத் திறந்து வைத்தார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன் மாறன், பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி, வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கௌதம ராஜா முத்துச்செல்வி சதீஷ், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், சங்கங்கோட்டை சந்திரன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.