• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

Byதரணி

Apr 10, 2023

நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சிலம்பரசன் ஐபிஎஸ்.இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
விசாரணைக்கு அழைத்து வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.இந்நிலைில் திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசன் ஐபிஎஸ்பொறுப்பேற்று கொண்டார்.