• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

காசியில் பிரதமர் தமிழக மாணவர்களை சந்தித்து பேசுகிறார்- அண்ணாமலை

ByA.Tamilselvan

Nov 17, 2022

வரும் 19-ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழகத்திலிருந்து வந்துள்ள மாணவர்களை சந்தித்து பேசுகிறார் என அண்ணாமலை பேட்டி
கும்பகோணத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது..:- காசிக்கு நேற்று முதல் சிறப்பு ரெயில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் ரெயிலானது ராமேஸ்வரத்திலிருந்து தமிழக மாணவர்கள் 216 பேருடன் சென்றது. சென்னையில் இருந்து வாரணாசிக்கு ரெயிலை வழி அனுப்புவதற்கு சென்னை ஐ.ஐ.டி. நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது முழுவதும் அரசு நிகழ்ச்சி. எனவே, பொதுமக்கள் இணைந்து காசி தமிழ் சங்க பயணத்தை ஒரு வெற்றி பயணமாக மாற்றுவது நமது கடமை. தொடர்ந்து, இன்னும் 11 ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. வரும் 19-ம் தேதி காசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, தமிழகத்திலிருந்து வந்துள்ள மாணவர்களை சந்தித்து பேசுகிறார். இது தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்