கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பள்ளியின் நிறுவனர்நீதிபதி இராஜசேகரன் , பள்ளி புரவலர்கள் நீதிபதி இரா.இராமசுப்பிரமணியன் , நீதிபதி க.இரா.சத்தியேந்திரன் , பள்ளி தாளாளர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் ஆகியோரின் நூற்றாண்டு நிறைவு விழா சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி மேனிலைப்பள்ளியில் பள்ளியின் தலைவர் சாந்தா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிச்செயலர் இராஜ்சேகர் வரவேற்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன் , சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன்,வழக்கறிஞர்கள் பாண்டியன் , சரவணன் , இன்ப லாதன், மதிவாணன், இரத்தினாகரன் மருத்துவர் கருணாகரன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகரன், பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.