• Tue. Apr 30th, 2024

கற்பூர சுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளி 60ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சான்றோர்கள் நூற்றாண்டு விழா

ByG.Suresh

Jan 21, 2024

கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி தொடக்கப் பள்ளியின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவும் பள்ளியின் நிறுவனர்நீதிபதி இராஜசேகரன் , பள்ளி புரவலர்கள் நீதிபதி இரா.இராமசுப்பிரமணியன் , நீதிபதி க.இரா.சத்தியேந்திரன் , பள்ளி தாளாளர் வழக்கறிஞர் இரா.சண்முகநாதன் ஆகியோரின் நூற்றாண்டு நிறைவு விழா சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன் இராமலெட்சுமி மேனிலைப்பள்ளியில் பள்ளியின் தலைவர் சாந்தா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளிச்செயலர் இராஜ்சேகர் வரவேற்றார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன் , சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன்,வழக்கறிஞர்கள் பாண்டியன் , சரவணன் , இன்ப லாதன், மதிவாணன், இரத்தினாகரன் மருத்துவர் கருணாகரன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகரன், பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *