• Fri. Apr 26th, 2024

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி

ByA.Tamilselvan

Sep 26, 2022

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 6பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *