• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..

Byகாயத்ரி

Sep 26, 2022

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார். ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு ஒன்று வெளியேறியதை கண்டு ஆசிரியர் திகைத்து போனார். அதிர்ஷ்டவசமாக, நாகப்பாம்பால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.