உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது.ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International Labour Organization) கூறுகிறது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தொழிலாளர் சந்தைகள் சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது. ரஷ்ய இராணுவம் இந்த போரை மேலும் தொடர்ந்தால் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்ற உச்சத்தை எட்டும் என்றும் இந்த கணிப்பு தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை உடனடியாக நிறுத்தினால், 3.4 மில்லியன் வேலைகள் திரும்பவும் விரைவான மீட்பு சாத்தியமாகும். இது வேலை இழப்புகளை 8.9 சதவீதமாகக் குறைக்கும்.ரஷ்ய ஆக்கிரமிப்பால் உக்ரைன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போரினால் சுமார் ஐம்பத்தி நான்கு லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று விட்டன. பெண்கள், குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில் அகதிகளாக மாறிவிட்ட சூழ்நிலையில், உக்ரைனில் நிலவும் போர்ச்சூழலால் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து அகதியாக சென்றவர்களில் சுமார் 27 லட்சம் பெர் மில்லியன் பேர் வேலை செய்யும் வயதை சேர்ந்தவர்கள். இவர்களில், தோராயமாக 1.2 மில்லியன் பேர் வேலையை இழந்துள்ளனர் அல்லது வெளியேறியுள்ளனர்.
இந்த சிக்கலை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் அரசாங்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், தேசிய சமூகப் பாதுகாப்பு அமைப்பைச் செயல்பட வைக்க கணிசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் போரினால், அதன் அண்டைநாடுகளான ஹங்கேரி, மால்டோவா, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. போர் நீண்டகாலம் தொடர்ந்தால், உக்ரேனிய அகதிகள் நீண்ட காலம் வெளிநாடுகளில் இருக்க வேண்டியிருக்கும். இதனால், அண்டை நாடுககளில் உள்ள தொழிலாளர் சந்தை மற்றும் சமூக பாதுகாப்புக்கும் அழுத்தம் அதிகரிக்கும்.
உக்ரைனில் மட்டுமல்ல, இந்தப் போர், ரஷ்ய கூட்டமைப்பையும், மத்திய ஆசியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனின் ஆக்கிரமிப்பு உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக, COVID-19 ஏற்படுத்திய மாபெரும் நெருக்கடியிலிருந்து மீள்வதை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]