• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் 42 மனுக்களுக்கு தீர்வு…

ByG.Suresh

Nov 29, 2023

தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் வழிகாட்டுதலின்பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி கே அரவிந்த் ஆகியோர் தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமை மனு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்று நடைபெற்ற பொதுமக்கள் மனு குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், மொத்தம் 42மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இதில் கூடுதல்காவல்கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.