• Fri. Apr 26th, 2024

24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

By

Aug 31, 2021 , ,

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் வரும் 24 மணி நேர கோவிட்-19 தடுப்பூசி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ,பொதுமக்களுக்கு பயன்பெறும் விதமாக 24 மணி நேரம் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் மையம் செயல்பட்டு வருவதால்,

அனைத்து பணிக்கு செல்லும் பணியாளர்களுக்கும் இந்த தடுப்பூசி மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து ,தடுப்பூசி மையத்தில், 8 மணி நேரம் பணியாற்றும் விதமாக ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது

இந்த சிறப்பு தடுப்பூசி மையத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி, கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *