நாவலூரில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து..!
சென்னை – நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் சென்னை நாவலூர் சாலையில் நாளை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது…
அக்.24ல் வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்..!
வரும் அக்டோபர் 24ஆம் தேதி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு வார நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்தியாவின்…
கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் கொண்டாட்டம்..!
கோவையில் விஜய் ரசிகர்கள் ‘வேட்டைக்கும் ரெடி, கோட்டைக்கும் ரெடி’ என போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படம் குறித்த அப்டேட் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக “நா ரெடிதான் வரவா”…
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..!
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க…
திமுகவினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.., அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு விளாசல்..!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வீட்டுக்கு வீடு தங்கம் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.வின் 52 – வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினர் கொண்டாடி வரக்கூடிய வேளையில்…
தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்ட கப்பல் சேவை..!
கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு…
மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்காக அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு படிக்கும் போது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்தும் உயர்கல்வியில் சேர்வதற்கான போட்டி தேர்வுகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து…
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் குறைவு..!
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து…
தமிழக மீனவர்களைத் தாக்கி கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்..!
இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களைத் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.தமிழக மீனவர்கள் நேற்று வழக்கம்போல் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நாகை கோடியக்கரை பகுதிக்கு வந்த கடற்கொள்ளையர்கள், அங்கு மீன்பிடித்துக்கொண்டருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை தாக்கி விட்டு…
பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை..!
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.சிவகாசி ரெங்கபாளையம் கம்மாபட்டி மற்றும் மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…





