• Fri. Apr 26th, 2024

நான்கு விரலால் தண்டால் எடுத்து 12ம் வகுப்பு மாணவன் சாதனை!…

By

Aug 19, 2021

நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை புரிந்த 12ம் வகுப்பு மாணவர் சாதனை புரிந்துள்ளார்

மதுரை மாவட்டம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா – முத்துமாரி தம்பதிகளின் மகன்
ஷரீஸ்பாபு. இவர் தனபால் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 17 வயதான இந்த மாணவர் இரண்டு கைகள் மற்றும் நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் 1 நிமிடத்தில் 85 தண்டால் எடுத்து உலக சின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இதனை முறியடிக்கும் விதமாக 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையில் சாதிக்க வேண்டும் என நினைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *