• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் சஹோதயா பள்ளிகளின் 10-வது ஆண்டு தடகளப் போட்டி தொடக்கம்..,

BySeenu

Aug 17, 2026

கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் 10-வது ஆண்டு தடகளப் போட்டி – 2026, கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. ஆகஸ்ட் 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடக்க விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் என். கண்ணன், IPS, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
சச்சிதானந்தா பள்ளியின் செயலாளர் டாக்டர் கவிதாசன் ஒலிம்பிக் கொடியையும், PA International School முதல்வரும் KSSC துணைத் தலைவருமான மகேஷ் நாராயணன், கோவை சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் கொடியையும் ஏற்றினர்.

விழாவில் தேசியக் கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் சஹோதயா கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அணிவகுப்பு, இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் ஒலிம்பிக் ஜோதி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விவேகானந்த அகாடமி மாணவர்கள் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கியதுடன், அப்பள்ளி மாணவர்களின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பல்வேறு பள்ளிகளில் சிறந்து விளங்கும் இளம் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றனர். அவர்களின் சாதனை, விடாமுயற்சி மற்றும் விளையாட்டு நற்பண்புகளைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

போட்டிகளில் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் பல்வேறு களப்போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும், 6 முதல் 10 வயது வரையிலான சிறார்களுக்கான Kiddies Meet நிகழ்வும் இடம்பெறுகிறது.

KSSC தலைவர் மற்றும் PSG Public Schools முதல்வர் கிரிஷ் ஈஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், KSSC துணைத் தலைவர் மகேஷ் நாராயணன், செயலாளர் எஸ். பத்மநாபன், பொருளாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இத்தடகளப் போட்டி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குவதுடன், பள்ளிகளுக்கிடையே ஒற்றுமை, நேர்மையான விளையாட்டு மற்றும் விளையாட்டுச் சிறப்பை வளர்க்கும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.