தமிழகத்தில் மின்இணைப்புடன் 1 கோடியே 3 லட்சம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு இருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
தெரிவித்தார்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்படுகிற நாட்களுக்கேற்ப இந்த சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு வரை ஏறத்தாழ ஆன்லைனில் 51 லட்சம் பேர் இணைத்துள்ளார்கள். பிரிவு அலுவலகங்களில் செயல்படும் ஆன்லைன் சேவையில் 52 லட்சம் பேர் இணைத்திருக்கிறார்கள். மொத்தம் 1 கோடியே 3 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் சேர்த்து ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்தப் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது.
இந்த மாதம் இறுதி வரை அதற்கான காலங்கள் இருக்கின்றன. எனவே, இந்த மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் மிகச் சிறப்பாக மக்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது மேம்படுத்தப்பட்டு உடனுக்குடன் அதாவது 2 நிமிடங்களில் ஒருவர் சுலபமாக இணைத்துவிடலாம். சென்னையைப் பொறுத்தவரை வணிக வளாகங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த மாத இறுதிக்குள் பெரும்பான்மையான மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வணிக வளாகங்கள், அதேபோல தலைமைச்செயலகத்தினுடைய இந்த பகுதிகள் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதலாக சிறப்பு முகாம் நடத்துவதற்கு மின்வாரியம் தயாராக இருக்கிறது. வரும்
25-12-2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகைநாளைத் தவிர, மீதம் இருக்கக்கூடிய விடுமுறை நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]