• Sat. Apr 20th, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் ஒருவர் கைது

Byadmin

Jul 10, 2021

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி சுந்தரவேல்புரம், சத்யா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் நேரு (54). லோடு மேன். இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், தூத்துக்குடி அனைத்து மகளிர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டத்தி்ன்கீழ் வழக்குப் பதிந்து நேருவை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *