தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில் பாதுகாப்பு பணி காலி பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 127 திருக்கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக ஒப்பளிக்கப்பட்ட 185 ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் /ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் தங்களது உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.