• Fri. Apr 26th, 2024

இளம்பெண் தற்கொலை : உதவி ஆட்சியர் விசாரணை!..

Byadmin

Jul 17, 2021

தூத்துக்குடியில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததது தொடர்பாக உதவி ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள திருவனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சரண்யா (22). இந்த தம்பதியருக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நேற்று சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு வழக்குப் பதிவு செய்துள்ளார். தூத்துக்குடி உதவி ஆட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *