• Wed. Apr 17th, 2024

மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர்…

Byadmin

Jul 19, 2021

திண்டுக்கல் அருகே 20 ஆண்டுகலுக்கு பின்பு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன் கலைப் பிடித்துச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் அடியநூத்து பஞ்சாயத்தில் உள்ளது நல்லாம் பட்டி இவ்வூருக்குச் சொந்தமான இராஜகுளம் என்னும் குளம் உள்ளது இந்தக் குளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த மழையினால் குளம் நிறம்பியது குளத்தில் பல்வேறு வகைகளான கெண்டை, கட் லா, கோகு, முல்லுக்கென்டை, உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கலை ஊர் பொதுமக்கள் சார்பில் பணம் வசூல் செய்து குளத்தில் மீன் குஞ்சுகள் வாங்கி விட்டு இருந்தனர் இன் நிலையில் இன்று நல்லாம் பட்டி பொது மக்கள் சார்பில் குளக்கரையில் உள்ள கன்னிமார் கோவிலில் சாமி கும்பிட்ட பின்பு மீன்பிடி திருவிழா நடைபெற்றது இதில் நல்லாம் பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் கலை பிடித்துச் சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *