• Tue. Apr 23rd, 2024

கோவையில் அதிகரிக்கும் கொரோனா.., புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

By

Aug 8, 2021

கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 2-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் வணிக வளாகங்கள், டீக்கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள் , உணவகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும் கோவை கேரளா எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து கோவை வருவோர் கட்டாயமாக இப்பதிவு பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்ட சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் வருவ அனுமதி வழங்கப்படும்.


இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கோவையில் உள்ள மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகளான மருந்தகம், காய்கறி கடைகளை தவிர பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் இது ஆடி மாதம் என்பதால் ஆடிப்பெருக்கு ஆடி ,கிருத்திகை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் முக்கியமான கோயில்களில் உன் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மக்கள் கோவில்களில் அதிகம் கூடும் வாய்ப்பு உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இன்று புதிய கட்டுப்பாடுகள் அமலான நிலையில் கோவை 100 அடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது, மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *