• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சி அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

Byadmin

Jul 10, 2021

மாநகராட்சியில் ஒப்பந்தகாரர்கள் சங்க அலுவலகத்தை இடிக்க முயற்சிப்பதால் அதனை கண்டித்து சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்தகாரர்கள் சங்கம் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது
தற்போது பணி நிறைவடைந்த வேலைக்கான ஒப்பந்த பணம் 36 கோடி நிலுவையில் உள்ளது அந்தப் பணத்தினை கேட்டு ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனை சந்தித்தபோது பழைய வேலைகளுக்கான ஒப்பந்த பணம் தரமுடியாது முந்தைய ஆணையர் பணி ஒப்புதல் ஆணை வழங்கியதால் அவரிடமே ஒப்பந்த தொகையை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறி வருகிறார் இதனால் நாங்கள் முதலீ டு போட்டு பணி செய்தபணம் த மறுப்பதால் எங்களது வாழ்வதாரம் பாதிக்கபடுகிறது
மேலும் எங்களது சங்ககட்டி டத்தை இடிக்க முயற்சித்து வருகிறார் இதனை கண்டித்து காண்ராக்டர்கள் சங்க தலைவர் ராஜீ.செய லாளர் முருகானந்தம். பொருளாளர் சரவணன். மற்றும் காண்ட்ராக்டர்கள்திரண்டு
அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்